Karuppa swamy kovil Banner Image

Karuppa swamy kovil

Worship Places Hindu Temples

Karuppa swamy kovil
Business Enquiry
Also Listed In

அருள்மிகு வரம்தரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி

 

அன்புடையீர் வணக்கம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம். சோழவளநாட்டில (மேய்க்கல்நாயக்கன்பட்டி). நாகைநல்லூர் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் கலியுக கண் கண்ட காவல் தெய்வமான வரம் தரும்

ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி கண்ணீரை துடைக்கும் தெய்வமாக அவதரித்து உள்ளார்.

 

மேலும் இத்திருக்கோயில் பிரகாரத்தில் :

·         விதியை மாற்றி வினைத் தீர்க்கும் ஸ்ரீ விநாயகர்

·         அகிலத்தை காக்கும் அன்னை ஸ்ரீ மஹா காளியம்மன்

·         சங்கடங்களை தீர்க்கும் ஏழு சபத் கன்னிமார்கள்

·         சர்வ காரிய வெற்றி தரும் ஸ்ரீ முருகன்

·         சர்வ ஐஸ்வர்யத்தை அள்ளி தரும் ஸ்ரீ ஐயப்பன் (18 படியுடன்)

·         தோஷங்களை நீக்கி நலம் தரும் ஒன்பது நவகிரகங்கள்

·         குறைவில்லாத செல்வத்தை தரும் குபேர செல்வ லக்ஷ்மி

·         பல யுகங்கள் பூமியில் வாழும் பதினெட்டு சித்தர்கள்

ஆகியோருக்கும் உலகில் எங்குமில்லாத அளவுக்கு அதீத சக்தியுடன் சன்னதி அமைக்கப்படுகிறது.

அதுசமயம்,

தொழில் முன்னேற்றமடைதல், திருமணமாகாத ஆண், பெண் திருமண தடை நீக்குதல், குழந்தை பாக்கியம் கொடுத்தல், இலவச திருமணம் செய்து வைத்தல், தொழில்நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை தீர்த்தல், கணவன், மனைவி பிரிவை சரிசெய்தல், கை, கால் முடக்கங்கள் தீர்த்தல், நிலப்பிரச்சனை வழக்கு விவகாரங்களை வெற்றி பெறச் செய்தல், பேய், பிசாசு போன்ற அமானுஷியங்கள் விலகுதல் போன்ற தெய்வ காட்சிகளை ஒவ்வொரு வியாழன், வெள்ளி, மாத அமாவாசை நாட்களில் நேரடியாக காணலாம்.

·         ஒவ்வொரு மாத அமாவாசையும் அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு வழங்கப்படும்.

·         கோவில் வளாகத்தில் அன்ன பூரணி அன்னதானம் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.